Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜுவல்லரியில் கடையின் பூட்டை உடைத்து 50 லட்சம் மதிப்பிலான தங்கம் வெள்ளி நகைகள் கொள்ளை

ஜனவரி 26, 2019 11:34

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம் சேர்ந்தவர் சிபகத்துல்லா, இவருக்கு சொந்தமான மாஜிதா ஜூவல்லரி பட்டுக்கோட்டை பஜாரில் உள்ளது.

அவருக்கு சொந்தமான இந்த ஜுவல்லரியினை கடந்த 20 வருடமாக இந்த பகுதியில் நடத்தி வருகிறார். வழக்கம்போல நேற்று இரவு கடையை பூட்டி விட்டு இன்று காலை 5 மணி அளவில் தொழுகைக்கு சென்றபோது அவரது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

அதனை தொடர்ந்து கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 50 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் காணாமல் போனது தெரியவந்தது, கொள்ளையர்கள் மாட்டிக் கொள்ளாமல் இருக்க கடையில் வைத்திருந்த சிசிடிவி கேமராவை உடைத்து.

அதன் சேமிப்பு கருவியையும் எடுத்து சென்று உள்ளனர். இதனை அடுத்து அதிராம்பட்டினம்  காவல் நிலையத்தில் புகார் கொடுத்தன் பேரில் போலீசார் சம்பவ இடத்தில் வந்து வழக்கு பதிந்து ஆய்வு செய்து வருகின்றனர். 

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது, போலிசார் மோப்ப நாய் கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். திருடப்பட்ட பொருளின் மதிப்பு 50 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என நகைக்கடையின் உரிமையாளர் தெரிவித்து உள்ளார்.

நகைக் கடையின் பூட்டை உடைத்து மொத்த நகைகளையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்